மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கு நாளை தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, ஒரு மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், வாரந்தோறும் 4 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
#SrilankaNews