17
இந்தியாசெய்திகள்

கரூர் சம்பவம்: ஹேம மாலினி தலைமையில் ப.ஜ.க விசாரணைக்குழு அமைப்பு

Share

கரூர் சம்பவம் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள பாரதிய ஜனதா கட்சி, ஹேம மாலினி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர், நடிகர் விஜய் தலைமையிலான பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் நாடு முழுவதும் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவர் ஜே.பி. நட்டா, சம்பவத்தை ஆய்வு செய்ய 8 உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்துள்ளார்.

இந்த குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நடிகையுமான ஹேமா மாலினி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை எம்.பி.யுமான அனுராக் தாக்கூர், பாஜக எம்.பி.க்கள் தேஜஸ்வி சூர்யா, பிரிஜ் லால், சிவசேனா தலைவர் ஸ்ரீகாந்த் ஷிண்டே, பாஜக எம்.பி.க்கள் அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் புட்டா மகேஷ்குமார் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...