17
இந்தியாசெய்திகள்

கரூர் சம்பவம்: ஹேம மாலினி தலைமையில் ப.ஜ.க விசாரணைக்குழு அமைப்பு

Share

கரூர் சம்பவம் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள பாரதிய ஜனதா கட்சி, ஹேம மாலினி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர், நடிகர் விஜய் தலைமையிலான பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் நாடு முழுவதும் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவர் ஜே.பி. நட்டா, சம்பவத்தை ஆய்வு செய்ய 8 உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்துள்ளார்.

இந்த குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நடிகையுமான ஹேமா மாலினி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை எம்.பி.யுமான அனுராக் தாக்கூர், பாஜக எம்.பி.க்கள் தேஜஸ்வி சூர்யா, பிரிஜ் லால், சிவசேனா தலைவர் ஸ்ரீகாந்த் ஷிண்டே, பாஜக எம்.பி.க்கள் அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் புட்டா மகேஷ்குமார் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...