25 693fd3d85a76b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊவா மாகாணத்தில் உள்ள 892 பாடசாலைகளும் இன்று நண்பகலுடன் மூடல் – சீரற்ற வானிலையால் அதிரடி முடிவு!

Share

ஊவா மாகாணத்தில் தற்போது நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (09) நண்பகலுடன் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண தலைமைச் செயலாளர் இது குறித்து விடுத்துள்ள அறிவிப்பில் இன்று முற்பகல் 11.45 மணியுடன் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட வேண்டும். மாகாணத்திலுள்ள மொத்தம் 892 பாடசாலைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

மாகாணத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் அடைமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலை தொடர்வதால், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகே வசிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நிலைமை சீரானதும் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...