சம்பள உயர்வால் மகிழ்ச்சி: ஹப்புத்தளை தோட்டத் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்துக் கொண்டாட்டம்!

22

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வுக்காக, அரசாங்கத்திற்குத் தமது நன்றிகளையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் வகையில் ஹப்புத்தளை – கிளானோ (Glano) தோட்டத் தொழிலாளர்கள் விசேட கொண்டாட்டங்களை முன்னெடுத்தனர்.

தமது நீண்டகாலக் கோரிக்கையான சம்பள உயர்வு நிறைவேற்றப்பட்டதை முன்னிட்டு, கிளானோ தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தோட்டப் பகுதியில் பாற்சோறு சமைத்து, அதனைப் பகிர்ந்துண்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அரசாங்கம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு எடுத்த இந்தத் தீர்மானத்தைப் பாராட்டிய அவர்கள், இதன் மூலம் தமது குடும்பப் பொருளாதார நிலை ஓரளவு முன்னேற்றமடையும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்த மகிழ்ச்சிக் கொண்டாட்ட நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார (Ravindra Bandara) அவர்களும் கலந்துகொண்டார். இதன்போது தொழிலாளர்களுடன் உரையாடிய அவர், தோட்டத் தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என உறுதியளித்தார். தோட்டத் தொழிலாளர்கள் பல தசாப்தங்களாக எதிர்நோக்கி வந்த சம்பளப் பிரச்சினைக்குத் தற்போதைய அரசாங்கம் நிலையான தீர்வை வழங்கியுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

 

Exit mobile version