image 79371bbe21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய கல்விச் சீர்திருத்தத்தை உடனே அமல்படுத்து: கல்வி அமைச்சை முற்றுகையிட்ட தரம் 6 மாணவர்களின் பெற்றோர்கள்!

Share

தரம் 6-இற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி, பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு (இசுருபாய) முன்னால் இன்று (16) பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

2026-ஆம் ஆண்டில் 6-ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களே இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தனர். இதில் சீருடை அணிந்த பல மாணவர்களும் தங்களது பெற்றோருடன் இணைந்து பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சைக்குரிய ஆங்கிலப் பாடக் கற்றல் தொகுதியை (English Learning Module) தற்காலிகமாகத் தவிர்த்துவிட்டு, ஏனைய பாடங்கள் தொடர்பான புதிய கற்றல் தொகுதிகளை மாணவர்களுக்குக் கற்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்விச் சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்படுவதில் ஏற்படும் தாமதம் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளைப் பாதிப்பதாகப் பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர்.

சமீபகாலமாகப் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் அதில் உள்ள சில உள்ளடக்கங்கள் குறித்து அரசியல் மட்டத்தில் (குறிப்பாக விமல் வீரவன்ச போன்றவர்களால்) விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், கல்வியைப் பாதிக்க வேண்டாம் எனப் பெற்றோர்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
Court order 3
இலங்கை

புலிகளின் முகாம் தொடர்பில் வதந்தி – சந்தேக நபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

சமூக வலைத்தளங்களில் கிளிநொச்சி, பளை வனப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக போலித் தகவலை வௌியிட்ட...

Accidentkojioh
இலங்கை

திருமணத்திற்கு 2 நாள் வெளிநாடு செல்ல 3 நாள் இளைஞர் விபத்தில் பலி!

மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25...

ஷிரான் பாசிக்
இலங்கை

வறுமைக்கோட்டிலிருந்து டுபாய் வரை ஷிரான் பாசிக் தொடர்பில் வெளியாகும் உண்மைகள்!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன....

கெஹெலிய
இலங்கை

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் செல்ல அனுமதி!

இன்றைய தினம் காலை, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வாக்குமூலமொன்றினை வழங்குவதற்காக சென்றிருந்த நிலையில்...