செய்திகள்இலங்கை

தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகச் சர்ச்சை: முழுமையாக மீண்டும் அச்சிடப்படாது – கல்வி அமைச்சு அதிரடி!

Share

தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 6-ஆம் தர ஆங்கிலப் பாடப் புத்தகம் தொடர்பாக, கல்விப் பொதுத்தராதர நிபுணர்களுடன் இணைந்து கல்வி அமைச்சு தீவிர ஆலோசனைகளை முன்னெடுத்து வருகிறது.

தரம் 6 மாணவர்களுக்காக ஏற்கனவே 350,000 புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதற்காக சுமார் 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதால், முழுப் புத்தகத்தையும் மீண்டும் அச்சிடப்போவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சர்ச்சைக்குரிய பக்கத்தை நீக்கிவிட்டு புதிய திருத்தப்பட்ட பக்கத்தை இணைப்பதா அல்லது மாற்று வழிகளைக் கையாளுவதா என்பது குறித்து மூன்று வெவ்வேறு திட்டங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்தார்.

புத்தகத்தின் ஒட்டுமொத்த உள்ளடக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும், அரசாங்கத்திற்கு ஏற்படும் மேலதிக நிதிச் சுமைகளைக் குறைக்கும் வகையிலும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவுள்ளது.

நிபுணர்களின் இறுதி ஆலோசனை கிடைத்தவுடன், மிக விரைவில் பாடப் புத்தகங்களில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
நகைகளை வைத்து சூதாடிய குருக்கள்
இலங்கை

ஆலய நகைகளை திருடி சூதாடிய குருக்கள்!

கொழும்பு – கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கடந்த மாதம் 29ஆம் திகதி ஆலய...

Court order 3
இலங்கை

புலிகளின் முகாம் தொடர்பில் வதந்தி – சந்தேக நபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

சமூக வலைத்தளங்களில் கிளிநொச்சி, பளை வனப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக போலித் தகவலை வௌியிட்ட...

Accidentkojioh
இலங்கை

திருமணத்திற்கு 2 நாள் வெளிநாடு செல்ல 3 நாள் இளைஞர் விபத்தில் பலி!

மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25...

ஷிரான் பாசிக்
இலங்கை

வறுமைக்கோட்டிலிருந்து டுபாய் வரை ஷிரான் பாசிக் தொடர்பில் வெளியாகும் உண்மைகள்!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன....