11 12
செய்திகள்அரசியல்இலங்கை

பிரதமர் ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: ஜனவரி 22, 23-இல் விவாதிக்க அரசாங்கம் தயார்!

Share

கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.

இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து அவர், குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய இரு தினங்களில் பாராளுமன்றத்தில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்க்கட்சியினர் விரும்பினால், இந்த விவாதத்திற்காக இன்னும் கூடுதல் நாட்களை ஒதுக்கித் தருவதற்கும் அரசாங்கம் பின்வாங்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.

இந்த விவாதத்தை ஒரு சவாலாகப் பார்க்காமல், ஒரு வாய்ப்பாகவே அரசாங்கம் கருதுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாகச் சமூகத்தில் நிலவும் தவறான புரிதல்களை நீக்கவும், அதன் உண்மைத் தன்மையை மக்களுக்குத் தெளிவுபடுத்தவும் இந்த விவாதம் ஒரு சிறந்த தளமாக அமையும்.

கல்வித்துறையில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பாராளுமன்றத்தில் விரிவான விளக்கங்களை அளிக்கப் பிரதமர் தயாராக உள்ளார்.

எதிர்க்கட்சியினர் விரைவாக இந்தப் பிரேரணையைக் கொண்டுவருவார்கள் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த அவர், இதன் மூலம் சீர்திருத்தங்களின் யதார்த்தத்தை மக்கள் புரிந்துகொள்வர் என வலியுறுத்தினார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அவசரமாக நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறி எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தே இந்தப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. எனினும், தரம் 06 சீர்திருத்தங்கள் 2027 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவாதம் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...