images 6 3
செய்திகள்இலங்கை

டித்வா புயல் நிவாரணம்: மியன்மாரிலிருந்து இலங்கைக்கு 500 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை!

Share

இலங்கையை அண்மையில் தாக்கிய ‘டித்வா’ (Didwa) புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியாக 500 மெட்ரிக் தொன் அரிசியை மியன்மார் அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த அரிசித் தொகையை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு மியன்மாரின் யங்கோன் (Yangon) துறைமுக வளாகத்தில் இன்று நடைபெற்றது.

மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் பிரபாஷினி பொன்னம்பெரும அரிசித் தொகுதியை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மியன்மார் அரசாங்கத்தின் உயர் மட்டப் பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

புயல் அனர்த்தத்தினால் வாழ்வாதாரத்தை இழந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இந்த அரிசி ஒரு பெரும் நிவாரணமாக அமையும். மியன்மாரிலிருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்படவுள்ள இந்த அரிசித் தொகுதி, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.

இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளுக்கிடையிலான நீண்டகால பௌத்த மற்றும் கலாசார உறவுகளின் வெளிப்பாடாக இந்த உதவி அமைந்துள்ளதாகத் தூதுவர் பிரபாஷினி பொன்னம்பெரும இதன்போது நன்றியுடன் குறிப்பிட்டார்.

 

 

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....