WhatsApp Image 2022 01 23 at 8.34.47 PM 1
செய்திகள்உலகம்

ட்ரோன்களுக்கு தடைவிதித்த அரசு!!

Share

அபுதாபியில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு எதிரொலியாக மறுஅறிவித்தல் வரை ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன்களுக்கு தடைவிதிப்பதாக ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அபு தாபியில் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினார்கள். இதில் இரண்டு இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஆளாவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய வேலைகளுக்காக பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தேவைக்கான விதிவிலக்கு மற்றும் அனுமதி பெற்றுக் கொள்ள முடியும்.

சவுதி தலைமையிலான ராணுவ கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகம் இடம் பிடித்துள்ளது. ஏமன் உள்நாட்டு சண்டையில் சவுதி கூட்டுப்படை ஏமன் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

இதனால் ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 213
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெதுரு ஓயா துயரம்: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு – அனைத்து உடல்களும் மீட்பு!

குருநாகல், கோபேகானே பகுதியில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி மாயமானவர்களில் எஞ்சியிருந்த...

world 212
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வருகை!

இந்தியத் துணை ஜனாதிபதி திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக எதிர்வரும்...

world 211
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ரூபவாஹினி கூட்டுத்தாபன முறைகேடு வழக்கு: சரத் கொங்கஹகே உள்ளிட்ட இருவருக்குப் பிணை!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு (SLRC) நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அதன்...

world 210
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம்? டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 10 நாள்...