fdfcs
செய்திகள்இலங்கை

சலுகை விலையில் பொருட்கள்:வர்த்தக அமைச்சர் தெரிவிப்பு

Share

நேற்று முதல் சதொச ஊடாக குறைந்த விலையில் பெற முடியும் என அமைச்சர் பந்துல தெரிவிதார்

1998 எனும் தொலைபேசி இலக்கம் மூலம் அழைத்தால் வீடுகளுக்கே விநியோகம் செய்யப்படும்

10 kg சுப்பர் சம்பா , 01 kg வெள்ளை சீனி , 01 kg பருப்பு, 01 kg இடியப்ப மா ,500 g நெத்தலி , 400 g நூடில்ஸ் உட்பட பல பொருட்கள்

லங்கா சதொச ஊடாக சலுகை விலையில்  பொதியை வழங்கும் நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டதாக தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல ,

20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இந்த பொதியை 3998 ரூபாவிற்கு சதொசவில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்தப் பொதியை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அதன்படி 10 kg சுப்பர் சம்பா, 1 kg வெள்ளைச்சீனி, 1 kg பருப்பு, 1 kg இடியப்ப மா, 500 g நெத்தலி, 400 g நூடில்ஸ்,400 g உப்பு, 2 தேங்காய்ப்பால் பக்கெற் (330 ml.), 100 g மிளகாய்த் தூள், 100 g மஞ்சள் தூள், 100 g தேயிலை, 80 கிராம் பொடி லோஷன், 100 g சதொச சந்தன சவர்க்காரம், 100 ml. கை கழுவும் திரவம், 90 g சோயா மீற், சதொச TFM சலவை சவர்க்காரம் என்பன இப்பொதியில் அடங்கியிருக்கும்.

இதன் மூலம் நுகர்வோர் 1750 ரூபா நிவாரணத்தைப் பெற முடியும் என அமைச்சர் கூறினார்.

ஒரு kg நாட்டு அரிசியின் விலையை 105 ரூபாவுக்கு குறைவாகவும், சுப்பிரி சம்பா ஒரு kg 130 ரூபாவுக்கு குறைவாகவும் இந்த ஆண்டு இறுதி வரையில் பராமரிக்கும் பொறுப்பை லங்கா சதொச மேற்கொள்ளும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயறு 225 ரூபாவுக்கு சதொச விற்பனை நிலையங்களில் மட்டுமே கிடைக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு kg பயறு 225 ரூபாவுக்கு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

விவசாயிகளிடமிருந்து ஒரு kg பயறு 450 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாக அமைச்சர் கூறினார்.

பயறு 225 ரூபாவுக்கு சதொச விற்பனை நிலையங்களில் மட்டுமே கிடைக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...