fdfcs
செய்திகள்இலங்கை

சலுகை விலையில் பொருட்கள்:வர்த்தக அமைச்சர் தெரிவிப்பு

Share

நேற்று முதல் சதொச ஊடாக குறைந்த விலையில் பெற முடியும் என அமைச்சர் பந்துல தெரிவிதார்

1998 எனும் தொலைபேசி இலக்கம் மூலம் அழைத்தால் வீடுகளுக்கே விநியோகம் செய்யப்படும்

10 kg சுப்பர் சம்பா , 01 kg வெள்ளை சீனி , 01 kg பருப்பு, 01 kg இடியப்ப மா ,500 g நெத்தலி , 400 g நூடில்ஸ் உட்பட பல பொருட்கள்

லங்கா சதொச ஊடாக சலுகை விலையில்  பொதியை வழங்கும் நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டதாக தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல ,

20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இந்த பொதியை 3998 ரூபாவிற்கு சதொசவில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்தப் பொதியை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அதன்படி 10 kg சுப்பர் சம்பா, 1 kg வெள்ளைச்சீனி, 1 kg பருப்பு, 1 kg இடியப்ப மா, 500 g நெத்தலி, 400 g நூடில்ஸ்,400 g உப்பு, 2 தேங்காய்ப்பால் பக்கெற் (330 ml.), 100 g மிளகாய்த் தூள், 100 g மஞ்சள் தூள், 100 g தேயிலை, 80 கிராம் பொடி லோஷன், 100 g சதொச சந்தன சவர்க்காரம், 100 ml. கை கழுவும் திரவம், 90 g சோயா மீற், சதொச TFM சலவை சவர்க்காரம் என்பன இப்பொதியில் அடங்கியிருக்கும்.

இதன் மூலம் நுகர்வோர் 1750 ரூபா நிவாரணத்தைப் பெற முடியும் என அமைச்சர் கூறினார்.

ஒரு kg நாட்டு அரிசியின் விலையை 105 ரூபாவுக்கு குறைவாகவும், சுப்பிரி சம்பா ஒரு kg 130 ரூபாவுக்கு குறைவாகவும் இந்த ஆண்டு இறுதி வரையில் பராமரிக்கும் பொறுப்பை லங்கா சதொச மேற்கொள்ளும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயறு 225 ரூபாவுக்கு சதொச விற்பனை நிலையங்களில் மட்டுமே கிடைக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு kg பயறு 225 ரூபாவுக்கு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

விவசாயிகளிடமிருந்து ஒரு kg பயறு 450 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாக அமைச்சர் கூறினார்.

பயறு 225 ரூபாவுக்கு சதொச விற்பனை நிலையங்களில் மட்டுமே கிடைக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...