MALALA
செய்திகள்உலகம்

சிறுமிகள் மீண்டும் பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்- மலாலா

Share

ஆப்கானிஸ்தானில் சிறுமிகள் மீண்டும் கல்வி கற்க தலிபான்கள் அனுமதிக்க வேண்டுமென மலாலா தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சியைக் கைப்பற்றி ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டது.

பெண் குழந்தைகளுக்குக் கல்வி மற்றும் பல தடைகள் ஆப்கனில் விதிக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படுவது குறித்து தாலிபான்களுக்கு பெரும் எதிர்ப்புகளை சர்வதேச நாடுகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற மலாலாவும், ஆப்கன் பெண்களின் கல்வி சார்ந்த பல கோரிக்கைகளை தாலிபான்களுக்கு விடுத்து வருகிறார்.

மலாலாவால் வெளியிட்ட அறிக்கையில், “பெண்களின் கல்வி மறுக்கப்படுவதை எந்த மதமும் அனுமதிக்காது என்றும் ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மீண்டும் கல்வி கற்க தலிபான்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் தடையைத் திரும்பப் பெற வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆப்கனில் இயங்கும் பெண் அமைப்புகளும், பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும் என தாலிபான்களை வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பில் தலிபான்கள் எவ்வித கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...