FF3GdApX0AYiTCU
செய்திகள்விளையாட்டு

ஜப்னா கிங்ஸை சுழலில் சுருட்டிய காலி கிளாடியேட்டர்ஸ்!!!

Share

நேற்று ஆரம்பமான எல்.பி.எல் போட்டியில் ஜப்னா கிங்ஸை 54 ஓட்டங்களால் வெற்றி பெற்றது காலி கிளாடியேட்டர்ஸ்.

லங்கா பிறீமியர் லீக்கின் இரண்டாவது பருவகால போட்டிகள் நேற்றைய தினம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.

முதலாவது போட்டியில் நடப்பு சம்பியனான ஜப்னா கிங்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

காலி கிளாடியேட்டர்ஸ் அணி சார்பில் அணித்தலைவர் பாணுக ராஜபக்ச 56 ஓட்டங்களையும், சமித் பட்டேல் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

165 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 110 ஓட்டங்களைப் மாத்திரம் பெற்றுக் கொண்டது.

ஜப்னா கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக வகாப் றியாஸ் 27 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இதற்கமைய, நேற்றைய போட்டியில் காலி கிளாடியேட்டர்ஸ் அணி 54 ஓட்டங்களினால் வெற்றி பெற்றதுடன், போட்டியின் சிறப்பாட்டக்காரராக சமித் பட்டேல் தெரிவு செய்யப்பட்டார்.
#Sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...