க.பொ.த உயர்தரப் பரீட்சை: மனைப் பொருளியல் செயன்முறைப் பரீட்சைகள் ஜனவரி 24-இல் ஆரம்பம்!

MediaFile 1 6

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மனைப் பொருளியல் (Home Economics) பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 24-ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தப் பரீட்சைகள் ஜனவரி 24-ஆம் திகதி முதல் பெப்ரவரி 02-ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளன. நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 42 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்தச் செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

பாடசாலை விண்ணப்பதாரிகள்: இவர்களுக்கான அனுமதிச் சீட்டுகள் அந்தந்தப் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான அனுமதிச் சீட்டுகள் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தனிப்பட்ட முகவரிகளுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எந்தவொரு பரீட்சார்த்திக்காவது இதுவரை அனுமதிச் சீட்டு கிடைக்கப்பெறவில்லை எனில், அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. நாளை மறுதினம் (ஜனவரி 20) முதல் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலிருந்து (www.doenets.lk) அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

Exit mobile version