puttalam 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் முற்றாக தீக்கிரையான வீடு!

Share

நேற்று ஏற்பட்ட எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவத்தில் வீடும் வீட்டுடனான வர்த்தக நிலையமும் முற்றாக எரிந்து சாம்பலாகி உள்ளது. குறித்த சம்பவம் புத்தளம் குறிஞ்சிப்பிட்டி குரக்கன்சேனையில் பதிவாகியுள்ளது.

காலையில் தேநீர் தயாரிக்க அடுப்பை பற்ற வைத்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திடீரென பாரிய சத்தத்துடன் அடுப்பு வெடித்து சிதறியதுடன் வீடு முழுவதும் தீ பரவ ஆரம்பித்துள்ளது.

வீட்டில் இருந்த 3 பிள்ளைகளும், மருமகளும் பேரப்பிள்ளைகளும் வீட்டுக் வெளியே வந்து அயலவர் உதவியை நாடியுள்ளனர். பலகை வீடு என்பதால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கற்பிட்டி சகாத் ஒன்றியம் வீடொன்றை நிர்மாணித்து வழங்க முன்வந்துள்ளது. குறித்த குடும்பத்துக்கு உதவி செய்ய விரும்புவோர் 0716080071, 0774277092 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் அந்த அமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...