சுதந்திரக்கட்சி தலைமையில் ஆட்சி! – மக்கள் விருப்பம் அதுவே என்கிறார் மைத்திரி

maithripala sirisena

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையில் ஆட்சி அமையவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். சுதந்திரக்கட்சிக்கான கேள்வியும் தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

” எமது கட்சியைப் பலப்படுத்துவதற்கான பணிகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எந்தத் தேர்தல் நடைபெற்றாலும் அதற்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயார்.

இன்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கான கேள்வி மக்கள் மத்தியில் அதிகரித்து செல்கின்றது. சுதந்திரக்கட்சி ஆட்சியை மக்கள் கோருகின்றனர். அந்த இலக்கை நோக்கி நாம் பயணிப்போம்.” – எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பலப்படுத்தி, புதிய ஆட்சிக்கான வியூகம் வகுக்கப்பட்டுவருகின்றது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

#SriLankaNews

Exit mobile version