1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

Share

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள் வர்த்தக நிலையங்களில் பணம் சேகரிப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதால், இவ்வாறான மோசடிக்காரர்கள் குறித்து மக்கள் மற்றும் வர்த்தகர்கள் மிகவும் கவனமாக இருக்கும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சில நகரங்களில் சில தனி நபர்கள் இவ்வாறு மோசடியான செயல்களில் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது.

இந்த மோசடிக்காரர்கள் ஒவ்வொரு வர்த்தக நிலையங்களுக்கும் சென்று சுமார் 2,000 ரூபாய் வசூலிப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரழிவுகளுக்கு மத்தியில், சில தோட்டங்கள் மற்றும் கிராமங்களில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையை இந்தப் மோசடிக்காரர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பணம் வசூலிப்பதாகத் தெரிய வருகிறது.

எனினும், பல வர்த்தக நிலையங்கள் குறித்த நபருக்குப் பணம் வழங்கவில்லை என அறியமுடிகிறது. அனர்த்த நிவாரண நிதியுதவி வழங்கும் போது, உரிய அதிகாரபூர்வ நிறுவனங்களை மட்டுமே அணுகுமாறும், தனி நபர்களிடம் பணம் வழங்குவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...