h
செய்திகள்உலகம்

விடாமல் தாக்கிய நான்கு சூறாவளிகள் – ஐம்பதிற்கும் மேற்பட்டோர் சாவு

Share

அமெரிக்காவில் விடாமல் அடுத்தடுத்து தாக்கிய சூறாவளியால் 50 பேர் சாவடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது கென்டக்கி மாகாணத்தில் இன்று அடுத்தடுத்து நான்கு சூறாவளிக் காற்று அம்மாகாணத்தை நிலைகுலைய வைத்துள்ளது.

இதன் காரணமாக பல கட்டிடங்களும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

இச்சூறாவளியில் சிக்கி ஐம்பதிற்கும் மேற்பட்டோர் சாவடைந்திருக்கலாமென அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 200 மைல் தூரத்திற்கு சுழன்று அடித்த காற்றால் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி விட்டதாக கென்டக்கி மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும் சாவடைந்தோரின் எண்ணிக்கை 100 ரை தாண்டலாம் என அவர் அச்சம் தெரிவித்தார்.

கென்டக்கி மாகாண வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் மோசமான சூறாவளி இது எனவும் அங்குள்ள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

மேபீல்டு நகரத்தில் உள்ள ஒரு மெழுகுவர்த்தி தொழிற்சாலையின் மேல் பகுதி சேதம் அடைந்ததன் காரணமாக இந்த உயிர் சேதம் ஏற்பட்டு விட்டதாகவும் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சூறாவளி காரணமாக மேபீல்டு நகரத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை போல இல்லினாய்சில் ஒரு பெரிய அமேசான் குடோனை சூறாவளி தாக்கியதாகவும், அங்கு சுமார் 100 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாகவும் சேத நிலவரம் குறித்த தகவல் எதுக்கும் தெரியவில்லை என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
wor
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் ஏர் அம்புலன்ஸ் விமானம் விழுந்து விபத்து! – காட்டில் நொருங்கிய விண்கலம்; ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் அம்புலன்ஸ் (Air...

vijai
செய்திகள்இந்தியா

ஸ்டாலின் vs விஜய்: சட்டமன்றத் தேர்தல் ஒரு ‘நேரடிப் போர்’ என அதிரடி முழக்கம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்,...

image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...