25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

Share

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில் கொண்டு, மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மஹா ஓயா படுகையின் துணை ஆறுகள் கணிசமான மழையைப் பெற்றுள்ளதால், அடுத்த 36 மணி நேரத்திற்குள் மஹா ஓயா தாழ்நிலப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

பாதிப்பு ஏற்படக்கூடிய பிரதேச செயலாளர் பிரிவுகள்: அலவ்வ, திவுலப்பிட்டி, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான மற்றும் தங்கொட்டுவ.

தெதுரு ஓயா படுகையின் மேல் மற்றும் நடுத்தரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, தெதுரு ஓயாவின் நீர்மட்டம் வெள்ள அபாயத்தை நெருங்கி வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வான்கதவுகள் திறப்பு: தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 16,250 கன அடி நீர் தெதுரு ஓயாவில் திறந்து விடப்பட்டுள்ளது.

பாதிப்பு ஏற்படக்கூடிய பிரதேச செயலாளர் பிரிவுகள்: வாரியபொல, நிகவெரட்டிய, மஹாவ, கோபேகனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிகட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய தெதுரு ஓயாவை ஒட்டி அமைந்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

நீர்த்தேக்கங்களைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள், மேற்கூறிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிப்பவர்கள் மற்றும் அப்பகுதி வீதிகளைப் பயன்படுத்தும் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share
தொடர்புடையது
image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...

images 1 2
செய்திகள்இலங்கை

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 3 சந்தேகநபர்கள் கைது!

நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின்னபோலேகம பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட...