24 6666a311c414a
இந்தியாசெய்திகள்

ஒரு ஓடுபாதையில் இரு விமானங்கள் : மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு

Share

ஒரு ஓடுபாதையில் இரு விமானங்கள் : மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு

மும்பை விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து ஒரு விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே, அதே ஓடுபாதையில், மற்றுமொரு விமானம் தரையிறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே, அதே ஓடுபாதையில், மத்திய பிரதேசத்தின் இந்துாரில் இருந்து மும்பைக்கு வந்த இண்டிகோ நிறுவனத்தின் விமானம் தரையிறங்கியது.

ஒரே ஓடுபாதையில் இரு விமானங்களும் சிறிது இடைவெளியில் இயங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி அளித்ததை தொடர்ந்தே ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்கியதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒப்புதல்படியே, ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்பட்டதாக, ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த சம்பவம் நடந்த போது பணியில் இருந்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியை,சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதுடன் மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...