அமெரிக்காவில் முதலாவது ஒமிக்ரொன் தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டதால் அந்நாட்டு மக்கள் ஐயத்தில் உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆபிரிக்க நாடொன்றில் இருந்து அமெரிக்கா திரும்பிய ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தொற்றுள்ள நபருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களை அடையாளம் காணப்பட்டு, அவர்களையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு தொற்று உறுதியான நபர் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒமிக்ரொன் திரிபு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து , அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசியை மிக விரைவாக செலுத்துமாறு வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இவ்வைரஸ் முழுமையான தடுப்பூசி போட்டவார்களையும் தாக்கும் திறனுடையது விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment