dom penzionera 2
செய்திகள்உலகம்

போஸ்னியாவில் முதியோர் இல்லத்தில் கோரத் தீ விபத்து: 11 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

Share

போஸ்னியாவின் துஸ்லா நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 04) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துஸ்லாவில் உள்ள அந்தக் கட்டிடத்தின் ஏழாவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. போஸ்னியா ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, வளாகத்தின் மேல்தளங்களில் நடக்க முடியாத முதியவர்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்களில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை உறுதியாகக் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். நிலைமையை மதிப்பிடுவதற்காக, நேற்று புதன்கிழமை (நவம்பர் 05) அவசரக் கூட்டம் நடத்தப்பட்டதாகத் துஸ்லா மேயர் ஸிஜாத் லுகாவிக் தெரிவித்தார்.

அந்தக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் வசிக்கும் ருசா காஜிக் என்ற பெண், தான் தூங்கச் சென்ற போது “வெடிக்கும் சத்தங்கள்” கேட்டதாகவும், மேல்தளங்களிலிருந்து தீப்பிழம்புகள் விழுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1036524 cigar
செய்திகள்இலங்கை

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் நாடுகள்: 70.5% உடன் இந்தோனேசியா முதலிடம்; இலங்கை 8வது இடத்தில்!

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் இந்தோனேசியா உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இது...

MediaFile 2
செய்திகள்இந்தியா

நிகழ்நிலை சூதாட்ட செயலி வழக்கு: சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ரூ. 11 கோடி சொத்துகள் முடக்கம்!

ஒரு குறிப்பிட்ட நிகழ்நிலை சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்...

25 690cc39f76f96
செய்திகள்இந்தியா

மாத்தறை வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் நவம்பர் 28 அன்று தெரிவு: வர்த்தமானி வெளியீடு!

மாத்தறை, வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் (தலைவர்) எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி தெரிவு...

24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு...