21 617419a735662 600x375 2
செய்திகள்இலங்கை

உர மோசடி தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் – ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி

Share

உர மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முழுமையான அதிகாரம் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே கூறியவை வருமாறு,

நாம் அரசில் அங்கம் வகிக்கின்றோம் என்பதற்காக மௌனம் காக்க முடியாது. சீன நிறுவனத்திடமிருந்து உரம் இறக்குமதி செய்ததற்கு துறைசார் அமைச்சரும் அதனுடன் தொடர்புபட்டவர்களுமே பொறுப்பு கூறவேண்டும்.

மக்கள் பணத்திலிருந்து சீன நிறுவனத்துக்கு கொடுப்பனவை வழங்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு. சம்பந்தப்பட்ட நபர்கள் தான் அதனை செலுத்த வேண்டும்.

அதேவேளை, சேதன பசளை மற்றும் திரவ உரம் தொடர்பில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முழு அதிகாரம் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன்.” -என்றார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...