உத்தர பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்ததை வீடியோ எடுத்த செய்தியாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு எதிராக வீதியை மறித்து, போராடிக் கொண்டிருந்தபோது அவ் வீதி வழியாக பயணித்த பா.ஜ.க தொண்டர்கள் விவசாயிகள் மீது காரினை செலுத்தினர்.
இதனால் ஒன்பது பேர் உயிரிழந்தனர். இச் சம்பவத்தை வீடியோ எடுத்த ஊடகவியலாளர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளை காரினால் மோதித்தள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.