சமூக ஊடக சேவைகளான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன மீண்டும் இயல்புக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. நேற்று இரவு முதல் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன செயலிழந்தன.
பிரதான இரண்டு செயலிகளும் திடீரென செயலிழந்தமையினால் மில்லியன் கணக்கான பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு ஏற்பட்டமை போன்று பாரிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நெருக்கடி காரணமாக பேஸ்புக் நிறுவனத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இதனால் ஏற்பட்ட நெருக்கடிக்கு பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியிருந்தது.
இந்நிலையில், சுமார் ஆறு மணி நேரத்திற்கு பின்னர் குறித்த மூன்று செயலிகளும் வழமைக்கு திரும்பியுள்ளன. இதுவரை கண்டிராத மிகப்பெரிய தொழில்நுட்ப பிரச்சனையாக இது கருதப்படுகிறது.
Leave a comment