25 694d12fa09782
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் சிறுமி மரணம்: 6 பேர் கொண்ட நிபுணர் குழு இன்று விசாரணையை ஆரம்பிக்கிறது!

Share

முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவினர், தமது விசாரணைகளை இன்று (26) ஆரம்பிக்கவுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எம். உமாசங்கரின் பரிந்துரைக்கமைய, விசேட மருத்துவர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள் உள்ளிட்ட 06 பேர் கொண்ட குழு இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் இன்று முற்பகல் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை நடைமுறைகள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் குறித்த முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த நிபுணர் குழு சமர்ப்பிக்கும் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு ஒவ்வாமை காரணமாக கடந்த 21ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனினும், மருத்துவமனையின் கவனக்குறைவு மற்றும் உரிய சிகிச்சை வழங்கப்படாமையே சிறுமியின் மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக நீதியான விசாரணை கோரி அவர்கள் முன்னெடுத்த போராட்டத்தைத் தொடர்ந்தே இந்த விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

 

 

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...