25 694d12fa09782
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் சிறுமி மரணம்: 6 பேர் கொண்ட நிபுணர் குழு இன்று விசாரணையை ஆரம்பிக்கிறது!

Share

முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவினர், தமது விசாரணைகளை இன்று (26) ஆரம்பிக்கவுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எம். உமாசங்கரின் பரிந்துரைக்கமைய, விசேட மருத்துவர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள் உள்ளிட்ட 06 பேர் கொண்ட குழு இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் இன்று முற்பகல் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை நடைமுறைகள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் குறித்த முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த நிபுணர் குழு சமர்ப்பிக்கும் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு ஒவ்வாமை காரணமாக கடந்த 21ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனினும், மருத்துவமனையின் கவனக்குறைவு மற்றும் உரிய சிகிச்சை வழங்கப்படாமையே சிறுமியின் மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக நீதியான விசாரணை கோரி அவர்கள் முன்னெடுத்த போராட்டத்தைத் தொடர்ந்தே இந்த விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

 

 

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...