625.500.560.350.160.300.053.800.900.160.90 24
செய்திகள்இலங்கை

அரசுக்குள் இருந்துகொண்டு சூழ்ச்சி செய்தோரே வெளியேற்றம்! – ஜோன்ஸ்டன்

Share

அரசுக்குள் இருந்துகொண்டு சூழ்ச்சி செய்ததாலேயே விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் -என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசுக்குள் இருந்துகொண்டு எதிரணியின் வேலையை செய்வதற்கே விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் முற்பட்டனர். பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவதைவிடுத்து, பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்தினர். அவர்களிடம் திட்டமிடல் இருக்கவில்லை. அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கும் விதத்திலேயே செயற்பட்டனர். அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகளை வழங்கியும், அவர்கள் அரசுக்கு எதிராகவே செயற்பட்டனர்.

எனவேதான் இவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம். அவர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். அன்று மங்கள செய்ததைபோன்றே இவர்கள் தற்போது செய்ய முற்பட்டனர். அன்று மங்களவை மஹிந்த வெளியேற்றினார். இன்று ஜனாதிபதி கோட்டாபய இவர்களை வெளியேற்றினார்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...