ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் – நீதியமைச்சருக்கிடையிலான சந்திப்பு !

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும், நீதியமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி ப்ளஸ் வரிச்சலுகையினை எதிர்காலத்திலும் பெற்றுக்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இலங்கைக்கு வழங்கப்படும் சலுகை தொடர்பில் சாதகமான நடவடிக்கைகளினை எடுப்பதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இதன்போது, குறிப்பிட்டனர் என நீதியமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்

இதற்கமைய, அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் சாதகமான பதில்களை அவர்கள் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

02

Exit mobile version