Mexico 2
செய்திகள்உலகம்

பாரவூர்திகளில் மறைந்திருந்த ஏதிலிகள்!

Share

மெக்ஸிக்கோவில் பாரவூர்திகளில் மறைந்திருந்த ஏதிலிகள் அந்நாட்டு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

மெக்ஸிக்கோவில் இரண்டு பாரவூர்திகளில் மறைந்திருந்த 600 ஏதிலிகளை அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் மீட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

600 பேரும் 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய 455 ஆண்களும் 145 பெண்களும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் குவாட்டமாலாவை சேர்ந்த 401 பேரும், பங்களாதேஷை சேர்ந்த 27 பேரு, இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுதவிர, ஹொண்டுராஸ், டொமினிக்கன், நிக்கரகுவா, எல்-சல்வடோர், கியூபா மற்றும் ஈக்குவடோர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அவர்களில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த நாடுகளில் உள்ளவர்கள் மெக்ஸிக்கோ வழியாக மத்திய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை நோக்கி நகர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக மெக்ஸிக்கோ அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...