திருப்பதியில் சூழல் பாதுகாப்பு நடவடிக்கை

97753

இந்தியா திருமலையில் காற்றில் மாசு கலப்பதை கட்டுப்படுத்தும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை முற்றிலும் தடை செய்வதாக அறிவித்துள்ளது. லட்டு, பிரசாதம் கூட கடதாசி பைகளில் விநியோகிக்கும் முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் தண்ணீர் போட்டில்களுக்கும் அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகளும் பற்றரி கார்களை உபயோகிக்கத் தொடங்கினர். இந்நிலையில், திருப்பதி – திருமலை இடையே அரசாங்க பற்றரி பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தற்போது திருப்பதி-திருமலை இடையே 35 பற்றரி அரச பஸ்கள் இயக்கப்படுகின்றன.

#IndiaNews

Exit mobile version