20
இந்தியாசெய்திகள்

அடுத்த மாதம் திருமணம்; கரூர் நெரிசலில் உயிரிழந்த புதுப்பெண், மாப்பிள்ளை

Share

தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், அடுத்த திருமணம் செய்துகொள்ளவிருந்த புதுப்பெண்ணும், மாப்பிள்ளையும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூரைச் சேர்ந்த கோகுலஸ்ரீ என்பவருக்கும், மதுரையைச் சேர்ந்த மதுரையைச் சேர்ந்த ஆகாஷ் என்பவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது.

இந்த ஜோடி கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் பங்கேற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து கோகுலஸ்ரீயின் தாயார் ஊடகத்திடம் பேசும்போது, “சாவதற்காகத்தான் இப்படிப் போனார்களா? கட்சி கட்சின்னு ஏன் எல்லாரையும் உயிரை விட வெக்கறீங்க? கட்சி கட்சின்னு எத்தனை பேரோட குடும்பம் வீதியில நிக்குது?

அடுத்த மாதம் கல்யாணம். ரெண்டு பேருக்குமே 24 வயசுதான் ஆகுது. ரெண்டு பேரும் ரெண்டு மணிவரைக்கும் பேசிட்டுதான் போனாங்க. கரூர்ங்கறனால போனாங்க. மாடிலதான் நிக்கறேன்னு சொன்னாங்க. நானும் கூடத்தான் இருந்தேன்.

இறங்கி வரையிலதான் என் புள்ளைய கொன்னுட்டாங்க. ஆறரை மணிக்கு போன்ல பேசுனோம். கும்பலா இருக்கு வந்துருங்கனு சொன்னோம். செல்பி எடுத்துட்டு வந்துடறேன்னு சொன்னாங்க.

செய்திய பாத்துட்டுதான் நாங்க வந்தோம். என் பையன் தப்பிச்சுக்கிட்டான். புள்ளையும், மாப்பிள்ளையும் போயிட்டாங்க. என் புள்ளைய ஆசை ஆசையா வளர்த்தேன்” என்றார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...