images 9
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் வெள்ளத்தால் அல்லலுறும் யானைகள்: உணவின்றி மனித குடியிருப்புகளை நோக்கிப் படையெடுப்பு!

Share

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நீரில் அல்லலுறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி கறுத்த பாலத்திற்கு அருகில் உள்ள பிரதேசத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் காடுகள் முழுவதும் வெள்ள நீர் காணப்படுகிறது.

இதன் காரணமாக யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றன. அதேவேளையில், காடுகளில் உணவின்மை காரணமாக யானைகள் மற்றும் ஏனைய வன விலங்குகள் மனிதக் குடியிருப்புகள் நோக்கிப் படையெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளநீர் வடிந்த பின்னரே வனவிலங்குகளின் இயல்பு வாழ்க்கை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. வனவிலங்குகளிடமிருந்து பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....