IMG 5278 1 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்தில் வயோதிபர் தலை சிதறிப் பலி! – வவுனியாவில் சோகம்

Share

வவுனியா, பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

வவுனியா, நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியில் பாரதிபுரம் 50 வீட்டுத் திட்டச் சந்திக்கு அண்மையிலுள்ள தம்பனைப் புளியங்குளம் பகுதியில் இன்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றது.

இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா – நெளுக்குளம் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற பெண் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று பாரதிபுரம் 50 வீட்டுத்திட்ட சந்திக்கு அண்மித்த தம்பனை, புளியங்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிர்த்திசையில் வந்த வயோதிபர் ஒருவரின் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது, விபத்துக்குள்ளான வயோதிபர் மீது வீதியால் வந்த பிறிதொரு வாகனம் அவரது தலைப் பகுதியில் மோதிச் சென்றமையால் அவர் சம்பவ இடத்திலேயே தலை சிதறிப் பலியானார்.

இந்த விபத்துடன் சம்பந்தப்பட்ட வாகனம் குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தடவியல் பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய தர்மராஜா என்ற வயோதிபரே மரணமடைந்தார்.

எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியான பெண் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

விபத்து இடம்பெற்றபோது மரணித்த வயோதிபரின் பின்னால் இராணுவத்தினரது வாகனம் ஒன்று வந்தது எனவும், விபத்து இடம்பெற்ற பகுதியில் பாரிய சத்தம் கேட்டது எனவும், இராணுவத்தினரது வாகனம் நிறுத்தப்பட்ட பின்னர், உடனடியாக அங்கிருந்து குறித்த வாகனம் சென்றுவிட்டது எனவும் விபத்து இடம்பெற்ற பகுதியில் நின்ற மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...