25 687ca2a2564c6
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ல் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி!

Share

குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சுகபோகங்களையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பது இந்த அரசாங்கத்தின் கொள்கையல்ல என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று (21) வட மாகாணத்தைச் சேர்ந்த சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது பிரதமர் வெளியிட்ட முக்கிய கருத்துக்கள்.

2025ஆம் ஆண்டு முதல் கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு, நாட்டின் கல்வி முறைமை பலப்படுத்தப்படும். 2026ஆம் ஆண்டில் நிலவும் ஆசிரியர் மற்றும் உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

வவுனியா மற்றும் கிளிநொச்சி பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக நிலவி வந்த குடிநீர் மற்றும் தங்குமிடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. வட மாகாணத்தின் கல்வித்துறை சார் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை என அண்மைய மீளாய்வில் தெரியவந்துள்ளது. ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. எனவே, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் இதில் அதிக ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும்.

நாட்டு மக்களுக்கு உண்மையான பயன் கிடைக்கும் வகையிலேயே அரசாங்கம் தற்போதைய பொருளாதாரத்தை நிர்வகித்து வருகின்றது. அரசாங்கம் முன்னெடுக்கும் இத்தகைய மாற்றங்கள் மூலம் எதிர்கால சந்ததியினருக்குச் சமமான கல்வி வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படும் என பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

 

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...