images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிழக்கு மாகாணத்திற்கு 100 மி.மீ. மழை எச்சரிக்கை: மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளதால் தயாராக இருக்குமாறு அரசு அதிபர் அறிவுறுத்தல்!

Share

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 10-ஆம் திகதி வரை கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இன்று (08) முதல் ஜனவரி 10-ஆம் திகதி வரை கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீரற்ற காலநிலை நிலவும் இக்காலப்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

பலத்த காற்று மற்றும் மழை காரணமாக மின் விநியோகக் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு, மின்தடை (Power Cuts) ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் அதற்குத் தேவையான மாற்று ஏற்பாடுகளுடன் (மின்விளக்குகள், பேட்டரிகள்) தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வானிலை அறிக்கைகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும், மரம் வீழக்கூடிய இடங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகே செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், அவசர காலங்களில் பிரதேச செயலகங்கள் அல்லது அனர்த்த முகாமைத்துவப் பிரிவைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...