images 4
செய்திகள்

நாட்டில் விரைவில் அறிமுகமாகவுள்ள மின்னணு கடவுச்சீட்டு குறித்து அமைச்சர் விளக்கம்

Share

நாட்டில் விரைவில் அறிமுகமாகவுள்ள மின்னணு கடவுச்சீட்டு குறித்து அமைச்சர் விளக்கம்

இலங்கையில் முதல் மின்னணு கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு தயாராகும் வகையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கடவுச்சீட்டுக்களை வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதியில் மின்னணு கடவுச்சீட்டுக்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் பல தொழில்நுட்ப மற்றும் சிக்கல்களை நிவர்த்தி செய்யவேண்டியுள்ளது.

இந்தநிலையில் நாள்தோறும் வழங்கப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை 1000ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் அவசர பயணத் தேவைகளைக் கொண்டவர்களுக்கு குடிவரவுத் திணைக்களம் கடவுச்சீட்டுகளை வழங்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளில் 30 வீதம் மாத்திரமே பயன்படுத்தப்பட்டதாகவும், மீதமுள்ளவை பாதுகாப்பிற்காக பெறப்பட்டதாகவும் அமைச்சர் அலஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதிக்குள் மின்னணு கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்குள் மின்னணு கடவுச்சீட்டு அமைப்பு தயாராகவில்லையெனில், விண்ணப்பதாரர்களுக்கு சாதாரண கடவுச்சீட்டுக்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...