images 4
செய்திகள்

நாட்டில் விரைவில் அறிமுகமாகவுள்ள மின்னணு கடவுச்சீட்டு குறித்து அமைச்சர் விளக்கம்

Share

நாட்டில் விரைவில் அறிமுகமாகவுள்ள மின்னணு கடவுச்சீட்டு குறித்து அமைச்சர் விளக்கம்

இலங்கையில் முதல் மின்னணு கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு தயாராகும் வகையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கடவுச்சீட்டுக்களை வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதியில் மின்னணு கடவுச்சீட்டுக்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் பல தொழில்நுட்ப மற்றும் சிக்கல்களை நிவர்த்தி செய்யவேண்டியுள்ளது.

இந்தநிலையில் நாள்தோறும் வழங்கப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை 1000ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் அவசர பயணத் தேவைகளைக் கொண்டவர்களுக்கு குடிவரவுத் திணைக்களம் கடவுச்சீட்டுகளை வழங்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளில் 30 வீதம் மாத்திரமே பயன்படுத்தப்பட்டதாகவும், மீதமுள்ளவை பாதுகாப்பிற்காக பெறப்பட்டதாகவும் அமைச்சர் அலஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதிக்குள் மின்னணு கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்குள் மின்னணு கடவுச்சீட்டு அமைப்பு தயாராகவில்லையெனில், விண்ணப்பதாரர்களுக்கு சாதாரண கடவுச்சீட்டுக்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
01 13
உலகம்செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் சிக்கிய இந்தியக் கப்பல்கள்: ஈரான் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பான பயணம்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பினருக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில்,...

p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...