8 38
இந்தியாசெய்திகள்

ரஜினி குறித்த சர்ச்சை பேச்சு.., முற்றுப்புள்ளி வைத்த துரைமுருகன்

Share

ரஜினி குறித்த சர்ச்சை பேச்சு.., முற்றுப்புள்ளி வைத்த துரைமுருகன்

நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசிய கருத்துக்கு நகைச்சுவையை பகைச்சுவையாக்க வேண்டாம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ” திமுகவில் உள்ள பழைய தலைவர்களை முதலமைச்சர் சிறப்பாக சமாளித்து வருகிறார். அதிலும், துரைமுருகன் என ஒருவர் இருக்கிறார்.

அவர் கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். ஒரு விடயத்தை செய்து எப்படி இருக்கிறது என கேட்டால் சந்தோஷம் என்று கூறுவார். நல்லா இருக்கிறது என்பதற்காக சந்தோசம் என்று சொல்கிறாரா? ஏண்டா இப்படி செய்கிறீர்கள் என்பதற்காக சந்தோசம் என்று சொல்கிறாரா? என்று புரியாது” என்றார்.

இவரின் கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி, தாடி வளர்ந்து, சாகுற நிலையில் உள்ளவர்கள், வயதானவர்கள் அனைவரும் நடிக்கின்றனர். இதனால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. அதை மறந்துட்டு ரஜினிகாந்த் பேசுகிறார்” என்றார்.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் பேசுகையில், “துரைமுருகன் என்னுடைய நண்பர். எங்கள் இருவருக்கும் இடையிலான நட்பு எப்போதும் தொடரும். அவர் என்ன சொல்லி இருந்தாலும் எனக்கு வருத்தம் கிடையாது.

அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று கூறினார். இந்நிலையில், ரஜினிகாந்தின் பேச்சை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், “நானும் ரஜினியும் எப்போதும் போல் நண்பர்களாக இருப்போம். நகைச்சுவையை பகைச்சுவையாக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...