8 38
இந்தியாசெய்திகள்

ரஜினி குறித்த சர்ச்சை பேச்சு.., முற்றுப்புள்ளி வைத்த துரைமுருகன்

Share

ரஜினி குறித்த சர்ச்சை பேச்சு.., முற்றுப்புள்ளி வைத்த துரைமுருகன்

நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசிய கருத்துக்கு நகைச்சுவையை பகைச்சுவையாக்க வேண்டாம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ” திமுகவில் உள்ள பழைய தலைவர்களை முதலமைச்சர் சிறப்பாக சமாளித்து வருகிறார். அதிலும், துரைமுருகன் என ஒருவர் இருக்கிறார்.

அவர் கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். ஒரு விடயத்தை செய்து எப்படி இருக்கிறது என கேட்டால் சந்தோஷம் என்று கூறுவார். நல்லா இருக்கிறது என்பதற்காக சந்தோசம் என்று சொல்கிறாரா? ஏண்டா இப்படி செய்கிறீர்கள் என்பதற்காக சந்தோசம் என்று சொல்கிறாரா? என்று புரியாது” என்றார்.

இவரின் கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி, தாடி வளர்ந்து, சாகுற நிலையில் உள்ளவர்கள், வயதானவர்கள் அனைவரும் நடிக்கின்றனர். இதனால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. அதை மறந்துட்டு ரஜினிகாந்த் பேசுகிறார்” என்றார்.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் பேசுகையில், “துரைமுருகன் என்னுடைய நண்பர். எங்கள் இருவருக்கும் இடையிலான நட்பு எப்போதும் தொடரும். அவர் என்ன சொல்லி இருந்தாலும் எனக்கு வருத்தம் கிடையாது.

அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று கூறினார். இந்நிலையில், ரஜினிகாந்தின் பேச்சை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், “நானும் ரஜினியும் எப்போதும் போல் நண்பர்களாக இருப்போம். நகைச்சுவையை பகைச்சுவையாக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...