இந்தியாசெய்திகள்

ரஜினி குறித்த சர்ச்சை பேச்சு.., முற்றுப்புள்ளி வைத்த துரைமுருகன்

Share
8 38
Share

ரஜினி குறித்த சர்ச்சை பேச்சு.., முற்றுப்புள்ளி வைத்த துரைமுருகன்

நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசிய கருத்துக்கு நகைச்சுவையை பகைச்சுவையாக்க வேண்டாம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ” திமுகவில் உள்ள பழைய தலைவர்களை முதலமைச்சர் சிறப்பாக சமாளித்து வருகிறார். அதிலும், துரைமுருகன் என ஒருவர் இருக்கிறார்.

அவர் கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். ஒரு விடயத்தை செய்து எப்படி இருக்கிறது என கேட்டால் சந்தோஷம் என்று கூறுவார். நல்லா இருக்கிறது என்பதற்காக சந்தோசம் என்று சொல்கிறாரா? ஏண்டா இப்படி செய்கிறீர்கள் என்பதற்காக சந்தோசம் என்று சொல்கிறாரா? என்று புரியாது” என்றார்.

இவரின் கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி, தாடி வளர்ந்து, சாகுற நிலையில் உள்ளவர்கள், வயதானவர்கள் அனைவரும் நடிக்கின்றனர். இதனால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. அதை மறந்துட்டு ரஜினிகாந்த் பேசுகிறார்” என்றார்.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் பேசுகையில், “துரைமுருகன் என்னுடைய நண்பர். எங்கள் இருவருக்கும் இடையிலான நட்பு எப்போதும் தொடரும். அவர் என்ன சொல்லி இருந்தாலும் எனக்கு வருத்தம் கிடையாது.

அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று கூறினார். இந்நிலையில், ரஜினிகாந்தின் பேச்சை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், “நானும் ரஜினியும் எப்போதும் போல் நண்பர்களாக இருப்போம். நகைச்சுவையை பகைச்சுவையாக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...