748760
செய்திகள்உலகம்

வரட்சியில் கென்யா: மனதை கலங்க வைக்கும் புகைப்படம்!!

Share

சமூக வலைதளங்களில் 6 ஒட்டகச்சிவிங்கிகள் இறந்துகிடக்கும்  புகைப்படமொன்று மனதை பதைக்க வைக்கும் வகையில் பரவலாக பகிரப்படுகின்றது.

குறித்த புகைப்படம் கென்யாவில் நிலவும் வறட்சியால் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள துயரை படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

உணவு, தண்ணீரின்றி தவித்த ஒட்டகச்சிவிங்கிகள், அருகிலுள்ள ஏறக்குறைய வறண்ட நிலையில் இருந்த ஒரு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குடிக்க முயன்றபோது சேற்றில் சிக்கி இறந்த பிறகு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நீர்த்தேக்க தண்ணீர் மாசுபடுவதை தடுக்க இவற்றின் உடல்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, அங்கு அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கென்யாவின் பெரும்பாலான இடங்களில் கடந்த செப்டம்பரில் இருந்து வழக்கமான மழைப்பொழிவில் 30 சதவீதத்துக்கு குறைவாகவே பெய்துள்ளது.

இதனால் இப்பிராந்தியத்தில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. கால்நடை மேய்ப்பவர்களும் தங்கள் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமின்றி தவிக்கும் நிலை உள்ளது.

#WorldNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
04 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளங்கன் வைத்தியசாலை துஷ்பிரயோகச் சம்பவம்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போராட்டத்திற்கு தடை!

டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் பெண்ணின் உடல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும்...

03 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்கோவிட்ட துறைமுகத்தில் 103 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் கொக்கைன் மீட்பு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்குரிய ஆழ்கடல்...

02 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு சின்னப்புல்லுமலை பகுதியில் காட்டு யானை தாக்குதல்: 59 வயதுடைய நபர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – செங்கலடி, சின்னப்புல்லுமலை கிராமத்தில் நேற்று (மார்ச் 7) இரவு காட்டு யானை தாக்கியதில்...

01 7
செய்திகள்இலங்கை

சர்வதேச மகளிர் தினம் 2026: பெண்ணின் பெருமையையும் சாதனைகளையும் போற்றும் நன்னாள்!

இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சமூக,...