images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

Share

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல நூற்றுக்கணக்கான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய “சிறீலங்காவின் ஆகப்பெரும் குற்றவாளி” எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா அரச இயந்திரத்துடன் இணைந்து ஒட்டுக்குழுவாக இயங்கியவர் என்றும், தமிழ் மக்களுக்கு எதிரான கொலைகள், கடத்தல்கள், காணாமலாக்கல்கள் மற்றும் வன்புணர்வுகளுக்கு அவரே முதன்மையான பொறுப்பாளி என்றும் சுகாஸ் சாடியுள்ளார்.

“இவர் சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தப்பட வேண்டியவர். இந்தியாவின் சூளைமேடு கொலை வழக்கில் இவருக்கு எதிரான பகிரங்கப் பிடியாணை இன்னமும் நிலுவையில் உள்ளது” என அவர் சுட்டிக்காட்டினார்.

டக்ளஸின் கைது வெறும் கண்துடைப்பாக இருக்கக்கூடாது. அவர் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் சட்ட நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

தற்போதைய NPP/JVP அரசாங்கம், பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் போன்றவர்களைக் கைது செய்ததைப் போலவே, இந்தக் கைதையும் ஒரு அரசியல் தந்திரமாகப் பயன்படுத்துகிறதா என்ற சந்தேகத்தை அவர் எழுப்பியுள்ளார். கைதானவர்கள் சில வாரங்களில் வெளியே வருவார்களேயானால், அது அந்தந்தக் கட்சிகளின் அடியாட்களைத் தம்வசப்படுத்தும் அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலாகவே கருதப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...