மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ஒரே நாளில் இருமுறை அதிர்ந்ததால் மக்கள் அச்சம்!

articles2FUK4fwSxpXY292Ae6yxC9

மியன்மாரில் இன்று மாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முதல் நிலநடுக்கம் இலங்கை நேரப்படி மாலை 4:13 மணி ரிச்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவானது.

நிலப்பரப்பிலிருந்து சுமார் 60 கி.மீ. ஆழத்தில் இந்த அதிர்வு உருவானது.

22.61 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 93.73 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை பகுதியில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.

மாலை 4:24 மணி (முதல் அதிர்வு ஏற்பட்ட 11 நிமிடங்களில்) ரிச்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவானது.

குறைந்த அளவிலான நிலநடுக்கங்கள் என்பதால், உயிர்ச் சேதங்களோ அல்லது பாரிய கட்டடப் பாதிப்புகளோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. எனினும், குறுகிய இடைவெளியில் பூமி அடுத்தடுத்து அதிர்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.

 

 

Exit mobile version