bo
செய்திகள்உலகம்

காபூல் விமான நிலையம் அருகே இரட்டைக் குண்டுத் தாக்குதல்! – தொடரும் மீட்பு பணி

Share

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இது தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 60 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காபூல் விமான நிலையத்தின் அப்பி வாயில் பகுதி அருகே முதலாவது குண்டுத்தாக்குதலும், அதன் அருகே உள்ள பரோன் விடுதி அருகே இரண்டாவது குண்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. இக் குண்டுத் தாக்குதலில், அமெரிக்க ராணுவ வீரர்கள், தலிபான்கள் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் அமைப்பு தாக்குதல் நடத்த வாய்ப்புக்கள் உள்ளன என அமெரிக்க அதிபர் மற்றும் உளவு அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்து 24 மணி நேரத்துக்குள் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானியர்கள் உட்பட வெளிநாட்டினர் பலரும் நாட்டைவிட்டு வெளியேற விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இந்த நிலையிலேயே இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கான் முழுவதும் வந்துள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தின் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளமை உலக நாடுகளிடையே மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

bomb

bom

bombb

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...