26 6966505129b29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை வைத்தியசாலையில் பணிப்பகிஷ்கரிப்பு: வெளிநோயாளர் பிரிவு முடங்கியதால் நோயாளிகள் அவதி!

Share

கிழக்கு மாகாண ரீதியாக இன்று (13) வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக, திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநோயாளர் பிரிவு இன்று முழுமையாக இயங்கவில்லை. இதனால் சிகிச்சைக்காகத் தூர இடங்களிலிருந்து வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்த முதியவர்கள் மற்றும் நோயாளிகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகியதாக எமது பிரந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்ற போதிலும், நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சைகள் தடையின்றி வழங்கப்பட்டன. உள்ளக நோயாளி பிரிவுகள் மற்றும் சத்திரசிகிச்சைக் கூடங்கள் இயங்கின.

பெரும்பாலான கிளினிக் (Clinics) சேவைகள் வழமைபோல் செயல்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியர்களின் இடமாற்ற நடைமுறைகள் அல்லது நிர்வாகச் சிக்கல்கள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண வைத்தியர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

 

 

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...