canada 1
செய்திகள்உலகம்

பழங்குடியின குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிப்பு! – விசாரணைகள் தீவிரம்

Share

கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்கு மாகாணத்தில் புதைக்கப்பட்ட மேலும் 90 பழங்குடியின குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கனடாவின் ‘கலாசார இனப்படுகொலை’ வரலாற்றை பறைசாற்றும் நூற்றுக்கணக்கான பழங்குடியின குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வருடத்திற்குள், 90 இற்கும் மேற்பட்ட ‘சாத்தியமான’ கல்லறைகள் பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் உறைவிடப் பாடசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் சுமார் 800 பழங்குடி மக்களைக் கொண்ட வில்லியம்ஸ் லேக் ஃபர்ஸ்ட் நேஷன், செயின்ட் ஜோசப் மிஷன் ரெசிடென்ஷியல் பாடசாலையில் புவி இயற்பியல் தேடலின் முதற்கட்டமாக ‘மனித கல்லறைகளின்’ குணாதிசயங்களைக் கொண்ட 93 உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 4,000 முதல் 6,000 குழந்தைகள் காணாமல் போனதாக அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், முன்னாள் உறைவிடப் பாடசாலை குறித்து கனடா முழுவதும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் ஏறத்தாழ ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பழங்குடியின குழந்தைகள் 1800 ஆம் ஆண்டிற்குப் பின்னர், குறிப்பாக 1990 ஆண்டு வரை கனடா முழுவதும் 139 குடியிருப்புப் பாடசாலையில்இ தங்கள் குடும்பங்கள், மொழிகள் மற்றும் கலாசாரங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழித்தனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தனிமைப்பட்டுத்தப்பட்டவர்கள் தாய்மொழிகளை விட்டு வெளியேறி, ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழி பேசும் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டிய நிர்பந்தம் இருந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...