Pavi
செய்திகள்அரசியல்இலங்கை

அடுத்த ஆண்டு முதல் டிஜிட்டல் போக்குவரத்து திட்டம்!!

Share

அடுத்த ஆண்டளவில் “சஹசர ” திட்டத்தின் கீழ் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது கருத்து தெரிவித்த அவர்,

டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் தொலைபேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும் 2000 தனியார் பஸ்களுக்கு ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளது.

இச் செயலியின் மூலம் மக்கள் அன்றாட பயணங்களுக்கு அழைத்து செல்லும் பஸ் வரும் நேரம் மற்றும் அதில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விரிவான தகவல்களை பெற முடியும் என்றார்.

இதேவேளை கொழும்பில் மின்சாரத்தால் இயக்கப்படும் பஸ் வண்டியை விரைவில் அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், முதலில் குறுந்தூர போக்குவரத்து சேவைகளை ஆரம்பித்து வாகன இறக்குமதி மீதான தடை நீக்கப்படும் போது மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...