அடுத்த ஆண்டளவில் “சஹசர ” திட்டத்தின் கீழ் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது கருத்து தெரிவித்த அவர்,
டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் தொலைபேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும் 2000 தனியார் பஸ்களுக்கு ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளது.
இச் செயலியின் மூலம் மக்கள் அன்றாட பயணங்களுக்கு அழைத்து செல்லும் பஸ் வரும் நேரம் மற்றும் அதில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விரிவான தகவல்களை பெற முடியும் என்றார்.
இதேவேளை கொழும்பில் மின்சாரத்தால் இயக்கப்படும் பஸ் வண்டியை விரைவில் அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், முதலில் குறுந்தூர போக்குவரத்து சேவைகளை ஆரம்பித்து வாகன இறக்குமதி மீதான தடை நீக்கப்படும் போது மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews
Leave a comment