Pavi
செய்திகள்அரசியல்இலங்கை

அடுத்த ஆண்டு முதல் டிஜிட்டல் போக்குவரத்து திட்டம்!!

Share

அடுத்த ஆண்டளவில் “சஹசர ” திட்டத்தின் கீழ் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது கருத்து தெரிவித்த அவர்,

டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் தொலைபேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும் 2000 தனியார் பஸ்களுக்கு ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளது.

இச் செயலியின் மூலம் மக்கள் அன்றாட பயணங்களுக்கு அழைத்து செல்லும் பஸ் வரும் நேரம் மற்றும் அதில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விரிவான தகவல்களை பெற முடியும் என்றார்.

இதேவேளை கொழும்பில் மின்சாரத்தால் இயக்கப்படும் பஸ் வண்டியை விரைவில் அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், முதலில் குறுந்தூர போக்குவரத்து சேவைகளை ஆரம்பித்து வாகன இறக்குமதி மீதான தடை நீக்கப்படும் போது மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...