vavuniya
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடக்கிலும் செயலிழந்தது அஞ்சல் துறை!!

Share

அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும், நேற்று (13) திங்கட்கிழமை மாலை 4 மணி முதல் இன்று நள்ளிரவு வரை அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர், சாந்த குமார மீகம இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதனால், யாழ்ப்பாண மாவட்டத்தில் தபால்சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பிரதம தபால் நிலையம் உட்பட மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்கள் செயலிழந்து காணப்பட்டன.

தபால் விநியோகம் உட்பட அனைத்து நடவடிக்கைககளும் ஸ்தம்பித்திருந்தன. தபால் சேவைகளைப்பெற தபால் நிலையங்களுக்கு வந்தோர் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

 

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...