25 68e368cf08698
செய்திகள்இலங்கை

இலங்கையில் திருமணங்கள் குறைவு: 2024 இல் 12,066 திருமணப் பதிவுகள் சரிவு!

Share

கடந்த ஆண்டில் (2024) நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்து அறுபத்தாறு (12,066) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நாட்டில் நடந்த மொத்த திருமணங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து முப்பத்தாயிரத்து இருநூற்று தொண்ணூறு (139,290) ஆக பதிவாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டில், ஒரு லட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து முந்நூற்று ஐம்பத்தாறு (151,356) திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட 2022 ஆம் ஆண்டில், நாட்டில் ஒரு லட்சத்து எழுபத்தொராயிரத்து நூற்று நாற்பது (171,140) திருமணங்கள் நடந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில், ஒரு லட்சத்து அறுபத்து இரண்டாயிரத்து அறுநூற்று இருபத்தெட்டு (162,628) திருமணப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன, மேலும் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் திருமணங்களில் படிப்படியாகக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இந்த திருமணங்களில் பெரும்பாலானவை பொதுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொருளாதாரப் பிரச்சினைகள், அதிகரித்த குடும்பப் பொறுப்புகள், உயர்கல்வி, வேலையின்மை, இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளத் தயங்குவது, குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேலையில் இருந்து போதுமான சம்பளம் இல்லாதது மற்றும் சமூகப் பிரச்சினைகள் ஆகியவை திருமணத்தைத் தாமதப்படுத்துவதற்கான காரணங்களாக சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...