24 6681fb25b3e29
செய்திகள்அரசியல்இலங்கை

கோட்டாபயவின் பாதையில் தற்போதைய அரசு: கல்வியில் இனவாதம் என சாணக்கியன் சாடல்!

Share

தற்போதைய அரசாங்கத்தின் நகர்வுகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் நிர்வாக முறையை ஒத்திருப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் திட்டமிடல்கள் குறித்துப் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கோட்டாபய ராஜபக்ஸவின் அரசாங்கம் விவசாயத் துறையில் முறையற்ற திட்டங்களை (உரத் தடை போன்றவை) புகுத்தித் தோல்வியடைந்ததைப் போல, தற்போதைய அரசாங்கம் கல்வித் துறையின் ஊடாக அதேபோன்றதொரு ஆபத்தான பாதையில் பயணிப்பதாக அவர் எச்சரித்தார்.

பல்கலைக்கழக கட்டமைப்புகளில் அரசாங்கம் சில விடயங்களை இனவாத ரீதியில் முன்னெடுத்து வருவதாக அவர் சாடினார். இது தொடர்பாக ஏற்கனவே தான் பிரதமருடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தும், நிலைமையில் மாற்றமில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும், கொள்கை ரீதியில் பழைய அரசாங்கத்தின் அதே நடைமுறைகளே தொடர்வதால் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.

கல்வி மறுசீரமைப்பு மற்றும் பல்கலைக்கழக நிர்வாக விவகாரங்களில் அரசாங்கம் அண்மையில் எடுத்த சில முடிவுகள் சிறுபான்மை இனத்தவர்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிப்பதாகத் தமிழ் அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், சாணக்கியனின் இந்த உரை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...