15 27
இந்தியாசெய்திகள்

மருத்துவமனைகளில் கோமியத்தை குடிக்க சொல்ல வேண்டும்.., சர்ச்சைக்கு பதிலளித்த சீமான்

Share

மருத்துவமனைகளில் கோமியத்தை குடிக்க சொல்ல வேண்டும்.., சர்ச்சைக்கு பதிலளித்த சீமான்

ஐஐடி இயக்குனர் பேசிய சர்ச்சை கருத்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்.

ஐஐடி இயக்குனர் காமகோடி செய்தியாளர்கள் சந்திப்பில், “மாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும். அதில், பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

இதனை அமெரிக்காவில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது. இந்த ஆவணத்தை உங்களுக்கு அனுப்புகிறேன்” என்றார்.

இவரின் பேச்சு சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் பாஜக மூத்த தலைவர் சௌந்தரராஜன் பேசுகையில், “ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியம், ‘அமிர்த நீர்’ என சொல்லப்பட்டிருக்கிறது” என்று சர்ச்சையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “மருத்துவமனைகளை மாட்டு கோமியத்தை குடிக்க சொல்ல வேண்டும். இந்த பைத்தியங்கள் கிட்ட நாடும் நாட்டு மக்களும் சிக்கி கொண்டுள்ளோம்.

மாட்டு பால் குடிக்கிறவர் இடைச்சாதி, மாட்டுக்கறி சாப்பிடுகிறவர் கீழ்சாதி, மாட்டு கோமியம் குடிக்கிறவர் உயர்ந்த சாதி. நம் நாட்டில் தான் நெய் எரிக்கப்படுகிறது, பால் கொட்டப்படுகிறது, கோமியம் குடிக்கப்படுகிறது” என்றார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...