இந்தியாவின் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இனி வெளிநாடுகளுக்கு பயணிக்கலாம் என இந்திய தெரிவித்துள்ளது.
அத்தோடு தடுப்பூசி தொடர்பாக மருத்துவ சோதனை தரவுகளை சமர்ப்பிக்குமாரு உலக சுகாதார அமைப்பு இந்தியாவிடம் கோரியுள்ளது.
மேலும், தடுப்பூசியின் திறன் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு WHO தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தடுப்பூசியின் திறன்குறித்த பரிசோதனை அறிக்கையினை பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார அமைப்பிற்கு அனுப்பியது.
இதனையடுத்து அவசரகால பயன்பாட்டிற்காக கோவேக்சின் தடுப்பூசிக்கு பயன்படுத்தலாமென உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியது.
ஆஸ்திரேலியா, மெக்சிகோ, ஈரான் உள்பட பல்வேறு நாடுகளும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளன. எனினும் ஒருசில நாடுகள் கேவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை சர்வதேச நாடுகள் அனுமதிப்பது தொடர்பாக இதுவரை எந்தவித அறிக்கையையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவேக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள அனுமதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
Leave a comment