1729389794 Fake Notes L
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் துணிகரம்: மரக்கறி வியாபாரியிடம் 5,000 ரூபா போலித் தாளைக் கொடுத்து மோசடி!

Share

மட்டக்களப்பு, பார் வீதியில் வீதியோரம் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த மரக்கறி வியாபாரி ஒருவரிடம், போலி 5,000 ரூபா நாணயத்தாளைக் கொடுத்து நபர் ஒருவர் மோசடி செய்துள்ள சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளது.

பார் வீதியில் தனது ‘பட்டா’ (Batta) ரக வாகனத்தில் மரக்கறி விற்பனை செய்துகொண்டிருந்த வியாபாரியிடம் வந்த நபர் ஒருவர், மரக்கறிகளை வாங்கியுள்ளார்.

கொள்வனவு செய்த பொருட்களுக்குப் பதிலாக 5,000 ரூபா தாளைக் கொடுத்துவிட்டு, அதற்கான மீதிப் பணத்தையும் பெற்றுக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

வியாபாரத்தின் போது நிலவிய அதிக மக்கள் கூட்டம் காரணமாக, பணத்தைச் சரிபார்க்காத வியாபாரி, பின்னர் மற்றொரு வாடிக்கையாளருக்கு மீதிப் பணம் கொடுக்க முயன்றபோதே அது வெறும் சாதாரண காகிதத்தில் அச்சிடப்பட்ட போலித் தாள் என்பதை உணர்ந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட வியாபாரி இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சந்தை மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இவ்வாறான போலி நாணயத்தாள்களைப் புழக்கத்தில் விட ஒரு கும்பல் இயங்கி வரக்கூடும் என்பதால், குறிப்பாக 5,000 மற்றும் 1,000 ரூபா தாள்களைப் பெறும் போது அதன் பாதுகாப்புத் தன்மைகளைச் சரிபார்த்து வாங்குமாறு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

 

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...