Japan arrest
உலகம்செய்திகள்

ஜப்பானில் கொள்ளைச் சம்பவம்: 30 வயது இலங்கையர் கைது!

Share

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பெண் ஒருவரைத் தாக்கி கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 30 வயதான இலங்கையர் ஒருவர் அந்நாட்டுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஜெயதுங்க ஆராச்சி சிரேஜ் தனுஷ்க (30) என ஜப்பானிய ஊடகங்கள் அடையாளம் கண்டுள்ளன.

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி, பெண் ஒருவரை வழிமறித்து அவரிடமிருந்த கடன் அட்டை (Credit Card) உள்ளிட்ட உடைமைகளைக் கொள்ளையிட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்து மற்றும் உடல் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இலங்கையர், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக சட்ட நடவடிக்கைகள் ஜப்பானிய நீதிமன்றங்களின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.

 

 

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...