Japan arrest
உலகம்செய்திகள்

ஜப்பானில் கொள்ளைச் சம்பவம்: 30 வயது இலங்கையர் கைது!

Share

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பெண் ஒருவரைத் தாக்கி கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 30 வயதான இலங்கையர் ஒருவர் அந்நாட்டுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஜெயதுங்க ஆராச்சி சிரேஜ் தனுஷ்க (30) என ஜப்பானிய ஊடகங்கள் அடையாளம் கண்டுள்ளன.

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி, பெண் ஒருவரை வழிமறித்து அவரிடமிருந்த கடன் அட்டை (Credit Card) உள்ளிட்ட உடைமைகளைக் கொள்ளையிட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்து மற்றும் உடல் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இலங்கையர், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக சட்ட நடவடிக்கைகள் ஜப்பானிய நீதிமன்றங்களின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.

 

 

Share
தொடர்புடையது
iraan us war
உலகம்

அமெரிக்காவிற்கு பதிலடி வழங்கிய ஈரான் – அமெரிக்க தளங்கள் இருக்கும் நாடுகள் மீது பலத்த தாக்குதல்.

  அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து, ஜோர்டான், குவைத் மற்றும் கத்தாரில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின்...

water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...